உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு

Published On 2022-11-07 14:15 IST   |   Update On 2022-11-07 14:15:00 IST
  • கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்க்கப்பட்டது
  • தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது நாய் ஒன்று அதே பகுதியில் உள்ள 60 அடி ஆழ முள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் ஏணி வைத்து கிணற்றில் இறங்கி பின்னர் கயிறு கட்டி நாயை உயிருடன் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News