உள்ளூர் செய்திகள்

120 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி கொண்ட கண்மாயை சுத்தம் செய்ய கோரிக்கை

Published On 2022-07-23 14:32 IST   |   Update On 2022-07-23 14:33:00 IST
  • 120 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி கொண்ட கண்மாயை சுத்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • நோய் தொற்று பரவுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை:

குப்பைத்தொட்டியாக மாறிவரும் கண்மாயை சுத்தம் செய்யும் வரை விவசாய பணிகளை மேற்கொள்ளமாட்டோம் என்று அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராம விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-

எங்கள் ஊரில் உள்ள கண்மாய் மூலம் சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன. மழைக்காலங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள அருகன்குளம், நெடுங்குளம், வண்ணான்குளம் ஆகிய குளங்களிலிருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீர் வைரிவயல் கண்மாய்க்கு வந்தடையும்.

இந்நிலையில் நகர்பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், அங்கிருந்து வருகின்ற தண்ணீரில் சாக்கடை கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடிதண்ணீர் போன்று பராமரித்து வந்த கண்மாயில் தற்போது வெங்காயத்தாமரை படர்ந்து சாக்கடை கண்மாயக மாறிவிட்டது.

அதோடு மட்டுமல்லாது நகர்புறத்திலிருந்து சேமிக்கப்படுகின்ற குப்பைகள் மற்றும் கோழிக்கழிவுகள் இக்கண்மாயில் கொட்டப்படுகிறது. இதனால் கண்மாய் தண்ணீரில் பல்வேறு விதமான தொற்றுக்கிருமிகள் உற்பத்தியாகி, தண்ணீரை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது.

மேலும் விவசாய காலங்களில் கண்மாயிலிருந்து பாய்ச்சப்படுகின்ற தண்ணீரில் நோய் தொற்று கிருமிகள் உள்ளதால், 

Tags:    

Similar News