உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் புல்வாமா நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2023-02-15 12:46 IST   |   Update On 2023-02-15 12:46:00 IST
  • கந்தர்வகோட்டையில் புல்வாமா நினைவு தினம் அனுசரிக்கபட்டது
  • 2019 பிப்ரவரி 14ல் தீவிரவாதிகளின் தற்கொலை படையால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.

கந்தர்வகோட்டை:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2019 பிப்ரவரி 14ல் தீவிரவாதிகளின் தற்கொலை படையால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதனை நினைவு கூறும் வகையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே உயிர் நீத்த வீரர்களின் உருவப் படங்களை வைத்து அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் விக்னேஷ் குமார் தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்கள் மத்தியில் நாட்டின் தேசபக்தியை கொண்டாடும் இந்த இளைஞர்களை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.


Tags:    

Similar News