உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாசற்ற தீபாவளி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

Published On 2023-11-08 09:13 GMT   |   Update On 2023-11-08 09:13 GMT
  • தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும்.
  • சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கட மையும் பொறுப்பும் ஆகும்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா விடுத்துள்ள செய்தி குறிப் பில் தெரிவித்துள்ளதா வது:-

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநா ளில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின் றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அள விலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கட மையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சுற்றுச் சூழ லுக்கு அதிக மாசு ஏற்படுத் தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவ ளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. என்று கலெக்டர் தெரிவித்துள் ளார்.

Tags:    

Similar News