உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை, பாக்குடியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
புதுக்கோட்டை, பாக்குடியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை துணை மின் நிலையத்தை சார்ந்த ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், சார்லஸ் நகர், கே.கே.சி. கல்லூரி, லட்சுமி நகர் 1-ம் வீதி, லட்சுமி நகர் 2-ம் வீதி ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோல் பாக்குடி துணை மின்நிலையத்தை சார்ந்த புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து தெரிவித்துள்ளார்."