உள்ளூர் செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது
- விலையில்லா சலவைப் பெட்டிகளை வழங்கினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 280 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4,871 மதிப்பீட்டில் விலையில்லா சலவைப் பெட்டிகளை கலெக்டார் கவிதா ராமு வழங்கினார்.