உள்ளூர் செய்திகள்

பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம்

Published On 2023-07-21 06:10 GMT   |   Update On 2023-07-21 06:10 GMT
  • பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
  • கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகில் கல்லுடைக்கும் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அன்புமணவாளன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ரெத்தினவேல் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், நலவாரிய கூட்ட முடிவின்படியும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பணப்பலன்கள் கிடைக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். நிலுவை மனுக்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News