உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் ஒருவருக்கு காயம்
- சாலை விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது
- மரத்தின் மீது மோதினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூரை சேர்ந்தவர் கருப்பையா மகன் பரிமளம் ( வயது 45). இவர் நேற்று கறம்பக்குடிக்கு சென்று பட்டாசுகளை வாங்கி தனது மோட்டார் சைக்கில் பின்புறத்தில் கட்டி வைத்து ஆலங்குடி நோக்கி வந்துள்ளார். ஆலங்குடி அருகே உள்ள அய்யனார்புறம் வரும்போது சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பரிமளத்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.