உள்ளூர் செய்திகள்

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மவுண்ட்சீயோன் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் சாதனை

Published On 2023-06-29 14:03 IST   |   Update On 2023-06-29 14:03:00 IST
  • முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மவுண்ட்சீயோன் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
  • மவுன்ட்சீயோன் கல்லூரியின் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அவர்களின் சிறப்பான திறன்களையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள கற்பக விநாயகா கலையரங்கத்தில் மாநில சட்டஅமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மவுண்ட் சீயோன் கல்லூரி மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

மவுன்ட்சீயோன் கல்லூரியின் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அவர்களின் சிறப்பான திறன்களையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினர். மாணவர்கள் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஒவ்வொரு விளையாட்டுகளிலும் 2-ம் பரிசைப் பெற்றனர். இறகுபந்து விளையாட்டில் மாவட்ட அளவில் முதல் மற்றும் 3-ம் பரிசுகளை தட்டிச்சென்றனர். இந்த ஆண்டு மவுண்ட்சீயோன் கல்லூரி மாணவர்கள் 7 விளையாட்டு பிரிவுகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மவுண்ட்சீயோன் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ஜெய்சன் ஜெயபாரதன், கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டினர். மாணவர்களின் விடாமுயற்சி, குழுப்பணி மற்றும் விளையாட்டில் அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் பாராட்டினர். மேலும் மாணவர்களின் முழுத்திறனையும் அடைய பயிற்சி மற்றும் வழிகாட்டுதலில் அயராது முயற்சி செய்து வரும் உடற்கல்வி இயக்குநர் டாக்டர் செல்வகண்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Tags:    

Similar News