உள்ளூர் செய்திகள்

விராலிமலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-09-11 08:19 GMT   |   Update On 2022-09-11 08:19 GMT
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சிதம்பர நகரை சேர்ந்தவர் ஹரிதர்ராஜ் (வயது 32).

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சிதம்பர நகரை சேர்ந்தவர் ஹரிதர்ராஜ் (வயது 32). தனியார் தொழிற்சாலையில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரியும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

நேற்று காலை 6 மணியளவில் வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ஹரிதர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News