மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீழச்சேரிகொடுகவயல் மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அறந்தாங்கி தாலுகா கீழச்சேரி கொடுகவயல் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, அப்பகுதி மக்கள் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நான்குகால யாகபூஜை நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து சிவக்குமார் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ மாணிக்க விநாயகர் அருள்பெற்று சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.