உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

Published On 2022-10-30 14:48 IST   |   Update On 2022-10-30 14:48:00 IST
  • ஒருங்கிணைந்த கல்வி குறித்தும் கல்வி சீர் வழங்கும் விழா சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
  • தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக மாணவர்களுக்கு கையேடு வழங்குதல் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை,

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் இலக்கிய தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதல் பருவ தேர்ச்சி அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது.

மாணவர்களின் ஆரோக்கியம் நலவாழ்வு குறித்தும் இடைநீற்றல், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்தும், இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்தும், ஒருங்கிணைந்த கல்வி குறித்தும் கல்வி சீர் வழங்கும் விழா சிறப்பாக நடத்துவது பற்றியும், சிறப்பு சீருடை வழங்குவது குறித்தும் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக மாணவர்களுக்கு கையேடு வழங்குதல் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சேர்க்கை, தக்க வைத்தல், குழுகற்றல் குழு' கட்டமைப்பு குழு, மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், ஆசிரியர்கள் மணிமேகலை, ரகமத்துல்லா, ஆனந்தராஜ், நிவின், செல்விஜாய், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News