உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2022-11-21 11:54 IST   |   Update On 2022-11-21 11:54:00 IST
  • லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்
  • ேபாலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கடைவீதியில் சிலர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் ேபாலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தெற்கு கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது58) என்பவர் அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராஜேந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 750 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளையும், 590 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News