உள்ளூர் செய்திகள்

அன்னவாசல் அருகே மது விற்றவர் கைது

Published On 2023-04-01 12:24 IST   |   Update On 2023-04-01 12:24:00 IST
  • அன்னவாசல் அருகே மது விற்றவர் கைது செய்யபட்டார்
  • விற்பனைக்காக வைத்திருந்த 72 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள மாங்குடியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் அன்னவாசல் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்ட போலீசார் மாங்குடி ரேஷன்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட மாங்குடி விளாப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 72 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.




Tags:    

Similar News