உள்ளூர் செய்திகள்
சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு சிறை
- 12ம் வகுப்பு படிக்கும் சிறுமி 6 மாத கர்ப்பம்
- போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மனோஜ்குமார் (வய து 22). டூவீலர் மெக்கானிக்கான இவர், அதே பகுதியில் உள்ள 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து. ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி வழக்கு பதிவு ெசய்து போக்சோ சட்டத்தில் மனோஜ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜ ர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.