கந்தர்வகோட்டையில் சர்வதேச யோகாதின விழா
- சர்வதேச யோகா தின நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, மற்றும் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகா செய்முறை பயிற்சிகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆடல், பாடல், விழாக்கள செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீரடிபட்டி குடியிருப்பில் செயல்பட்டு வரும்
இல்லம் தேடி கல்வி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச யோகா தின நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, மற்றும் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகா செய்முறை பயிற்சிகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
இதேபோல அம்மா புதுப்பட்டி, மருங்கூரணி, ராசா பட்டி, வடுகப்பட்டி மல்லிகை நத்தம், மஞ்ச பேட்டை, மங்கனூர், வலச்சேரிப்பட்டிஆகிய இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு சர்வதேச யோகா தினம் குறித்த விழிப்புணர்வும், பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்பட்டது.