உள்ளூர் செய்திகள்

தடை செய்யப்பட்ட குட்கா விற்றவர் கைது

Published On 2022-11-21 11:53 IST   |   Update On 2022-11-21 11:53:00 IST
  • தடை செய்யப்பட்ட குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்
  • ேபாலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள கைக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கேப்பரை பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சிலர் தமிழக அரசால் தடை செய் யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வல்லத்திராக் கோட்டை போலீருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கும்மங்குளம் கீழத்தெருவை சேர்ந்த மரிய வியாகுலம் (வயது 62) என்பவர் பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஆயிரத்து 960 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள், ஒரு செல்போன் மற்றும் 9 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்தை யும் பறிமுதல் செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News