- பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
- நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 327 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.17,350 மதிப்புடைய ரொலேட்டார், கார்னர் சேர், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்டவைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.fiஇக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.