உள்ளூர் செய்திகள்

மேற்பனைக்காடு கால்வாயில் மிதந்து வந்த பெண் உடல்

Published On 2022-06-20 13:58 IST   |   Update On 2022-06-20 13:58:00 IST
  • மேற்பனைக்காடு கால்வாயில் மிதந்து வந்த பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு அருகே கல்லணைக் காவல்வாயில் நடப்பாண்டு பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கிளை வாய்க்கால்களில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கால்வாய் மூலம்

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்தது. இந்நிலையில் மேற்பனைக்காடு வழியாக கீழ்பாலம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதந்து. இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மிதந்து வந்த உடலை மீட்டர். பிறகு பிரேத பரிசோதனைக்கூடத்திற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இச்சபம்வம் குறித்து பெறப்பட்ட புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து சடலமா தண்ணீரில் மிதந்து வந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர். தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து தண்ணீரில் வீசினார்களா ? என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News