உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து விவசாயி பலி

Published On 2023-05-03 13:03 IST   |   Update On 2023-05-03 13:03:00 IST
  • ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பாம்பு கடித்தது
  • மருத்துவமனை கொண்டு செல்லும்முன்பே இறந்த பரிதாபம்

புதுக்கோட்டை.

இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). விவசாயி. இவர் அருகில் உள்ள தன்னங்குடி குளம் அருகே நேற்று முன்தினம் ஆடுமேய்த்து கொண்டிருந்தார். அப்போது சுரேசை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுரேஷ் மனைவி போதும் பொண்ணு கொடுத்த புகாரின் பேரில், இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News