உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-02-17 12:57 IST   |   Update On 2023-02-17 12:57:00 IST
  • கறம்பக்குடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
  • கணவன், மனைவி இருவருக்கிடையே அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கூப்புடையான் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 52 ). விவசாயியான இவர் தனது மனைவி மேனகாவுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கிடையே அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலசுப்பிரமணியன் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜ்குமார் மலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருஞானம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News