உள்ளூர் செய்திகள்

பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்பு

Published On 2023-07-20 06:48 GMT   |   Update On 2023-07-20 06:48 GMT
  • ஒலியமங்கலத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் தனியார் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதை கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
  • ஆக்கிரமிப்பை அகற்றிட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

பொன்னமராவதி, 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான இடம் தனி நபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் அதனை அகற்றி, சுற்று சுவர் எழுப்பிட வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் வருவாய் துறையினருக்கு மனு அளித்தனர். இதனையடுத்து வருவாய் துறையினர் பள்ளி இடத்தை அளந்து அத்து கல் ஊன்ற வந்த போது தனிநபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு உள்ளது. இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது, மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி சுற்று சுவர் கட்டித்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News