உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி பணிமனையில் தி.மு.க. தொழிற் சங்க தேர்தல்

Published On 2022-07-25 09:16 GMT   |   Update On 2022-07-25 09:16 GMT
  • ஆலங்குடி பணிமனையில் தி.மு.க. தொழிற் சங்க தேர்தல் நடைபெற்றது
  • நான்கு பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மண்டலம் ஆ லங்குடி கிளையில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் ஆலங்குடி பணிமனை நடைபெற்றது. இதில் பொருளாளர் பதவிக்கு கொத்தமங்கலம் நடத்துனர் சந்திரசேகரன் மற்றும் பாரதி போட்டியிட்டனர். சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரியக சுப்பிரமணியன், சத்தியமூர்த்தி, ஐயப்பன், ஆறுமுகம் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் வெற்றி பெற்றவர்கள் பணிமனை எதிரில் வெடி வெடித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர். முன்னதாக தலைவராக நடத்துனர் செல்வம், துணைத் தலைவராக ஓட்டுநர் சுந்தர்ராஜன். செயலாளராக ஓட்டுநர் கணேசன், துணைச் செயலாளராக செபஸ்தியார் மொத்தம் நான்கு பதவிகளுக்கு ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

Tags:    

Similar News