உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி ஆணையரக இயக்குனர் ஆய்வு

Published On 2023-07-23 12:30 IST   |   Update On 2023-07-23 12:30:00 IST
  • ஆலங்குடி பேரூராட்சியில் பேரூராட்சி ஆணையரக இயக்குனர் ஆய்வு
  • திட்டப்பணிகளை அதிகளவு வழங்கிட கோரிக்கை

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் குளங்கள் மேம்பாடு, மின்மயானம் சாலை பணிகள் மேம்பாடு புறவழிச்சாலை போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பேரூராட்சி ஆணையரக இயக்குனர் கிரண் குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், தி.மு.க. நகர செயலாளர் பழனிகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உடன் சென்றனர். அப்போது ஆலங்குடி பேரூராட்சிக்கு மேலும் பல வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டு வருமாறு பேரூராட்சி இயக்குனரிடம் கோரிக்கை விடுத்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், அ.தி.மு.க. நகர செயலாளர் பழனிவேல், கவுன்சிலர் சையது இப்ராஹிம், மூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News