உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-26 13:18 IST   |   Update On 2023-03-26 13:18:00 IST
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
  • மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் கள் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கிட கோரி யும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க கோருதல், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயா;வு வழங்க கோருதல், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அரங்க.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப.உலகநாதன் முன்னிலை வகித்தார்.இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடை ப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன், சத்தியமூர்த்தி ஆகியோரும், அறந்தாங்கியில் மாவட்ட பொருளாளர் பொய்யா மொழி மற்றும் லோகநாதன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாண்டியன், வசந்த குமார், உதயசூரியன், ஜெகதீஷ், அருண் நேரு, வினோத் குமார், ரமேஷ், வின்சென்ட், ஞானசேகர், ஈடித்ரேனா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News