உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்

Published On 2023-05-08 14:00 IST   |   Update On 2023-05-08 14:00:00 IST
  • கறம்பக்குடி சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம் கிடந்தது
  • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பெரிய ஆறு பகுதியில் கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில், சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி, அடையாளம் தெரியாத 70 வயதான மூதாட்டி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags:    

Similar News