உள்ளூர் செய்திகள்

பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு

Published On 2023-05-16 11:23 IST   |   Update On 2023-05-16 11:23:00 IST
  • தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது
  • 20 பேருக்கு பணியிட மாறுதலுக்கான ஆைண வழங்கப்பட்டது

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அருகில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு இணைய தள வாயிலாக நேற்று நடைபெற்றது.இதில் அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 35 தலைமையாசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 20 தலைமையாசிரியர்கள் விரும்பிய பள்ளிகளை இணைய தள வாயிலாக தேர்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் 20 தலைமையாசிரியர்களுக்கு அதற்கான ஆணையினை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மஞ்சுளா வழங்கி வாழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில்  முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( உயர்நிலை) ராஜூ, கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை.செந்தில், இருக்கைப்பணி கண்காணிப்பாளர் சீனிவாசன்,  பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பிரிவு உதவியாளர் ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்துகொ ண்டனர்.பொது மாறுதல் கலந்தாய்வின் வாயிலாக விரும்பிய பள்ளிகளை இணைய தள மூலம் தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வருக்கும், தமிழக கல்வி அமைச்சருக்கும், கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கும் தலைமையாசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News