உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில் 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

Published On 2023-01-29 06:50 GMT   |   Update On 2023-01-29 06:50 GMT
  • புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில் 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது
  • பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது

புதுக்கோட்டை:

பல்வேறு வெளி நாடுகள் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து இனபெருக்கத்திற்காக பறவைகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருடம் தோறும் பறந்து வருகின்றன. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான செப்டம்பர்மாதத்திலும், வடகிழக்கு பருவமழை முடிவடையும் கால கட்டத்திலும் பறவைகள் கணக்கெடுப்புபணி நடைபெறும்வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துள்ள நிலையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்று (28ம் தேதி) தொடங்கிய இந்த பணியானது இன்றும் நடைபெற்றது. புதுக்கோட்டை வனசரகத்திற்குட்பட்ட அன்னவாசல் கண்மாய், ஆரியூர்கண்மாய், அரு வாக்குளம், கவிநாடு கண்மாய், அறந்தாங்கி வனசரகத்திற்குட்பட்ட பொன்பேத்தி ஏரி, செய்யா னம் ஏரி, கரகத்திக்கோட்டை கண்மாய், முத்துக்குடா கடல், கோடியக்கரை கடல், பொன்னமராவதி வனசரகத்திற்குட்பட்ட காரையூர்காரைகண்மாய், ஒலியமங்கலம்கண்மாய், ஏனாதி கண் மாய், கொன்னை கண்மாய், கீரனூர்வ னசரகத்திற்குட்பட்ட நீர்பழனி கண்மாய், ஔவையார்பட்டி கண்மாய், பேராம்பூர்கண்மாய், குளத்தூர்கண்மாய், திருமயம் வனசரகத்திற்கு ட்பட்ட தாமரை கண்மாய், பெல் ஏரி, நல்லம்மாள் சமுத்திரம் ஆகிய 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு ஈர நிலத்திலும் மேற்கொள்ளப்படும் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளில் ஒரு பறவைகள் நிபுணர், இரண்டு தன்னார்வலர்கள், 2 வனத்துறை அலுவலர்கள், ஒரு என்.ஜி.ஓ மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடம்பெற்றனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் செ.பிரபா கூறும் போது, வடகிழக்கு பருவமழை காலங்களில் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது. முன்னதாக இப்பணிகள் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு, நீர்மற்றும் இருப்பிடம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கப் பெறுக்கின்றனவா என்பது குறித்து கணக்கிட முடியும் என்று அவர் கூறினார்.


Tags:    

Similar News