search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enumeration work"

    • மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • மாணவர் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு புதிய பள்ளிகள் துவங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், 2023 - 24 ம் கல்வியாண்டில் துவக்க பள்ளிகள் துவங்கும் பகுதிகள், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர உள்ள பள்ளிகள், குறித்த பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

    வரும் கல்வியாண்டில் புதியதாக பள்ளிகள் துவங்க வேண்டிய பகுதிகள், நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த விபரங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் சேகரித்து, பட்டியல் தயாரிக்க வேண்டுமென, தொடக்கக் கல்வி இயக்குனரகம், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக திருப்பூர், தாராபுரம், உடுமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க கல்வி அளவில் பணிகள் துவங்கியுள்ளது. மொத்தமுள்ள பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள், 6முதல் 8-ம் வகுப்பு வரை படிப்போர் விபரம் சேகரிக்கப்படுகிறது. ஒரு பள்ளி அதன் அருகே உள்ள மற்றொரு பள்ளி (கி.மீ., அளவில்) விபரமும் சேர்க்கப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அமுதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ஒவ்வொரு தாலுகாவில் தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த விபரம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி பொறுப்பாளர்களின் விண்ணப்பம் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் எண்ணிக்கை, மக்கள் தொகை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு புதிய பள்ளிகள் துவங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். தற்போதைக்கு முதல்கட்ட பணி துவங்கியுள்ளது என்றார்.

    • புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில் 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது
    • பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது

    புதுக்கோட்டை:

    பல்வேறு வெளி நாடுகள் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து இனபெருக்கத்திற்காக பறவைகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருடம் தோறும் பறந்து வருகின்றன. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான செப்டம்பர்மாதத்திலும், வடகிழக்கு பருவமழை முடிவடையும் கால கட்டத்திலும் பறவைகள் கணக்கெடுப்புபணி நடைபெறும்வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துள்ள நிலையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    நேற்று (28ம் தேதி) தொடங்கிய இந்த பணியானது இன்றும் நடைபெற்றது. புதுக்கோட்டை வனசரகத்திற்குட்பட்ட அன்னவாசல் கண்மாய், ஆரியூர்கண்மாய், அரு வாக்குளம், கவிநாடு கண்மாய், அறந்தாங்கி வனசரகத்திற்குட்பட்ட பொன்பேத்தி ஏரி, செய்யா னம் ஏரி, கரகத்திக்கோட்டை கண்மாய், முத்துக்குடா கடல், கோடியக்கரை கடல், பொன்னமராவதி வனசரகத்திற்குட்பட்ட காரையூர்காரைகண்மாய், ஒலியமங்கலம்கண்மாய், ஏனாதி கண் மாய், கொன்னை கண்மாய், கீரனூர்வ னசரகத்திற்குட்பட்ட நீர்பழனி கண்மாய், ஔவையார்பட்டி கண்மாய், பேராம்பூர்கண்மாய், குளத்தூர்கண்மாய், திருமயம் வனசரகத்திற்கு ட்பட்ட தாமரை கண்மாய், பெல் ஏரி, நல்லம்மாள் சமுத்திரம் ஆகிய 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஒவ்வொரு ஈர நிலத்திலும் மேற்கொள்ளப்படும் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளில் ஒரு பறவைகள் நிபுணர், இரண்டு தன்னார்வலர்கள், 2 வனத்துறை அலுவலர்கள், ஒரு என்.ஜி.ஓ மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடம்பெற்றனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் செ.பிரபா கூறும் போது, வடகிழக்கு பருவமழை காலங்களில் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது. முன்னதாக இப்பணிகள் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு, நீர்மற்றும் இருப்பிடம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கப் பெறுக்கின்றனவா என்பது குறித்து கணக்கிட முடியும் என்று அவர் கூறினார்.


    ×