உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் கள்ள சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-23 08:43 GMT   |   Update On 2022-06-23 08:43 GMT
  • விழிப்புணர்வு பேரணி கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது.
  • பேரணியில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள், உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகள் கலைக்குழுவினர் மூலம் ஆடல், பாடல் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டையில் வருவாய்த்துறை சார்பில் கள்ளச் சாராயத்திற்க்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணிக்கு புதுக்கோட்டை கோட்ட கலால் ஆணையர் கண்ணகருப்பையா தலைமை தாங்கினார்.கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன் முன்னிலை வகித்தார்.

விழிப்புணர்வு பேரணி கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது.

விழிப்புணர்வு பேரணியில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள், உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகள் கலைக்குழுவினர் மூலம் ஆடல், பாடல் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News