கந்தர்வகோட்டையில் பொது தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
- கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
- கழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் துரைப்பாண்டி, ரெசிதரன், இளங்கோவன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை பகுதியில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பு இடம் பெற்ற மாணவர்களை முன்னாள் பள்ளி மாணவர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, கோமாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி 10,12ம் வகுப்புபொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், மாணவிகளுக்கு கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் துரைப்பாண்டி, ரெசிதரன், இளங்கோவன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.