உள்ளூர் செய்திகள்

பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-09-04 11:38 IST   |   Update On 2022-09-04 11:38:00 IST
  • பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • அக்டோபர் 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

புதுக்கோட்டை:

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995- ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதாளர் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 31.10.2022க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News