உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-12 12:29 IST   |   Update On 2023-07-12 12:29:00 IST
  • கந்தர்வகோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கந்தர்வகோட்டை கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடிகளை இணைப்பது மற்றும் மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பதவி உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News