உள்ளூர் செய்திகள்
ஆலங்குடியில் மூடப்பட்ட அங்கன் வாடி
- ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முஸ்லிம் தெருவில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் மூடப்பட்டது
- மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முஸ்லிம் தெருவில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இப்பகுதியில் உள்ள குழந்தைகள் இந்த அங்கன் வாடி மையத்தினால் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென இந்த அங்கன் வாடி மையம் மூடப்பட்டது. இது அப்பகுதி தாய்மார்க்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மூடப்பட்ட அங்கன்வாடியை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.