உள்ளூர் செய்திகள்
மது குறித்து விழிப்புணர்வு பேரணி
- மது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணியானது ஆவுடையார்கோவில் நான்கு ரத வீதிகள் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் கோட்டக்கலால் அலுவலர் பரணி முன்னிலை வகித்தார். பேரணியில் மது அருந்துதல் கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது மற்றும் போதைப் பழக்கத்தில் ஈடுபடக்கூடாது என்று பதாகைகள் ஏந்தியும், மக்களை கவரும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணியானது ஆவுடையார்கோவில் நான்கு ரத வீதிகள் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.