புதுக்கோட்டையில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட குழு கூட்டம்
- புதுக்கோட்டையில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஏஐடியூசி குழு கூட்டம் மாவட்ட தலைவர் அரசப்பன் தலைமையில் நடைபெற்றது. ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் போதிய அளவில் பணி நியமனம் செய்திட வேண்டும், ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அத்த கூலி வழங்கும் முறையை கைவிடவேண்டும், பண்ணை தினகூலி தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படை உயர்த்தி வழங்கிட வேண்டும், ஓய்வுபெறும்போது வழங்க வேண்டிய பணபலன்களை பணி நிறைவு நாள் அன்றே உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பொதுசெயலாளர் ப.ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் டி.எம்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கே.ஆர்.தர்மராஜன், கெளரவ தலைவர்கள் வீ.சிங்கமுத்து, ஏனாதி ஏ எல் இராசு, எஸ்.நாராயணன், பா.பாண்டியராஜன், ஆர்.மணிவண்ணன், பா.செளந்தரராஜ், கே.மணி, டி.ராஜா, டி.ஆர்.ரெங்கையா, ஏ.மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.