உள்ளூர் செய்திகள்

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-10-18 06:37 GMT   |   Update On 2022-10-18 06:37 GMT
  • விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நிலை பள்ளியில், ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையில், பள்ளி வளாகத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய செயல் முறை விள க்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.

பிறகு இவர் கூறுகையில், தற்போது தீபாவளி நெருங்கி வருவதை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடவே ண்டுகிறேன். பட்டா சுவெடிக்கும்போது நம்மிடையே முன்னெச்சறிக்கையாக கையில் வைத்து கொள்ளவேண்டியது மணல், நூல் சாக்கு ,தண்ணீர், இ வைகளை நாம் பாதுகாத்து வைத்துகொண்டு பட்டாசு வெடிக்க வ ண்டும் என்றார்.

தீயணைப்பு மீட்பு பணியாளர்கள் வெடிகள் வெடிப்பது குறித்து பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கி பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News