உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

Published On 2022-08-30 12:09 IST   |   Update On 2022-08-30 12:09:00 IST
  • பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்
  • ரூ. 530 பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சரக காவல்துறை கண்காணிப் பாளர் தீபக் ரஜினிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவரது தலை மையிலான தனிப்படை போலீசார் ஆலங்குடி அரசமர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கீழாத்தூர் காலனி தெருவை சேர்ந்த கருணாநிதி (வயது 61) புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த வீரப்பன் (55.)ஆலங்குடி கண்ணகி தெரு, பாச்சிக்கோட்டை மேலக்காடு சேர்ந்த கணேசன் (54), ஆலங்குடி ஆண்டிகுளத்தைச் சேர்ந்த விக்னேஷ் ( 32), ஆலங்குடி கண் ணகி தெரு விக்னேஷ் ( 28), கல்லாலங்குடி கலைஞர் நகர் முத்துக்குமார் (55). நடுப்பட்டி பள்ளத்திவிடுதி புஷ்பராஜ் (46) ஆகிய 7 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 530 பறிமுதல் செய்தனர்.

பின்னர் காவல் ஆய்வாளர் அழகம்மை இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News