உள்ளூர் செய்திகள்
- வீட்டில் இருந்த 7 ஆடுகள் மாயமானது
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி ஊராட்சி சூத்தியன்காடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 56) இவரது 2 ஆடும்'அதே பகுதியை சேர்ந்த வடக்கு அக்ரஹாரம் அடைக்கலம் மகன் பார்த்திபன் ( 44) இவரது 5 ஆடுகள் என மொத்தம் 7 ஆடுகளை வீட்டின் பின்புறத்தில் கட்டி வைத்திருந்தனர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது ஆடுகளை காணமால் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரி ன் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன ஆடுகளை தேடி விசாரித்து வருகின்றனர்.