உள்ளூர் செய்திகள்

இரும்பு கதவை திருடி சென்ற 2 பேர் கைது

Published On 2022-10-21 13:46 IST   |   Update On 2022-10-21 13:46:00 IST
  • இரும்பு கதவை திருடி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
  • பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாலூர் வடக்கு மேல குடியிருப்பை சேர்ந்தவர் கருணாநிதி மகன் அஜித்குமார் (வயது 27). அறந்தாங்கி அண்ணா நகர் பள்ளிவாசல் தெரு சைய து முகமது மகன் ஹாஜா சாகுல் ஹமீது (வயது 52). இவர்கள் இருவரும் நான்க சக்கர வாகனத்தில் நம்பம்பட்டியில் உ ள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மோட்டார் ரூமிற்கு வந்து அங்கிருந்த இரும்பு கதவை உடைத்து அதனை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை பிடித்து ஆலங்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீ திமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி அவர்கள் இருவரையும் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News