உள்ளூர் செய்திகள்

வாழைகள் மீது கற்கள் விழுந்து கிடக்கும் காட்சி.

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விடிய, விடிய போராட்டம்- ராதாபுரம் அருகே பரபரப்பு

Published On 2023-02-01 09:10 GMT   |   Update On 2023-02-01 09:10 GMT
  • புத்தேரி என்னும் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.
  • போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈடுபட்டனர்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் இருக்கன்துறை ஊராட்சி புத்தேரி என்னும் கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.

கல்குவாரி

இதில் நேற்று முன்தினம் கல்குவாரியில் கற்களை தகர்க்க சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களை பயன்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் அந்தப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் கற்கள் வெடித்து சிதறியதில் சுடலை மற்றும் இசக்கியப்பன் என்பவரது வீட்டின் மேற்கூறையும் மற்றும் வீட்டின் பக்கவாட்டின் சிமெண்ட் பூச்சிகள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

வாழைகள சேதம்

மேலும் கல் குவாரிகளில் வெடித்து சிதறிய கற்கள் விவசாயிகள் பயிரிட்ட வாழைகள் மீது விழுந்துள்ளது. இதனால் வாழை பயிர்களும் சேதம் அடைந்துள்ளது.

இதையறிந்த ஊர் பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஊரின் மையப் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கஞ்சி காட்சியும் போராட்டம் நடத்தினர். நேற்று இரவு விடிய, விடிய நடைபெற்ற போராட்டம் இன்றும் தொடர்கிறது.

சம்பவ இடத்திற்கு பாரதீய ஜனதா மாவட்ட பொருளாளர் செட்டிகுளம் பாலகிருஷ்ணன் சென்று ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், புத்தேரியில் கல் குவாரி அமைக்க ஆரம்பத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

போலீஸ் குவிப்பு

கல்குவாரியால் இவ்வளவு விளைவுகள் நடந்த பின்பும் அதிகாரிகள் பொதுமக்களை வந்து சந்திக்கவில்லை. கல்குவாரியை மூடவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

இதனால் புத்தேரி கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News