உள்ளூர் செய்திகள்

சாலையை சீரமைக்க கேட்டு பொதுமக்கள் மறியல்

Published On 2022-11-17 09:31 GMT   |   Update On 2022-11-17 09:31 GMT
  • சேலம் இரும்பாலை அடுத்த செம்மண் திட்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
  • இதை அடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு செம்மண் திட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்:

சேலம் இரும்பாலை அடுத்த செம்மண் திட்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்குள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதை அடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு செம்மண் திட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் இன்று காலை இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News