உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அருண் தம்புராஜிடம் பொதுமக்கள் மனு அளித்த காட்சி.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கடலூர் கலெக்டர் உத்தரவு

Published On 2023-07-18 07:11 GMT   |   Update On 2023-07-18 07:12 GMT
  • ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 52 மனுக்களும், இதர மனுக்கள் 300 ஆக மொத்தம் 626 மனுக்கள் வரப்பெற்றன.
  • துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, மாற்றுதிறனாளி கள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். கூட்டத்தில் பட்டா தொடர்பான 134 மனுக்க ளும், ஆக்கிரமிப்பு தொடர் பாக29 மனுக்களும்இ முதி யோர் உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 37 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 17 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 52 மனுக்களும், இதர மனுக்கள் 300 ஆக மொத்தம் 626 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறை களுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர் களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News