உள்ளூர் செய்திகள்

திசையன்விளையில் பொதுக்கூட்டம்; அ.தி.மு.க. சாமானிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி- கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா பேச்சு

Published On 2022-10-18 09:16 GMT   |   Update On 2022-10-18 09:32 GMT
  • திசையன்விளை நேரு திடலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
  • ஜெயலலிதா ஆட்சியையும், கட்சியையும் சிங்கம் போல் நடத்தினார்.

திசையன்விளை:

நெல்லை மாவட்ட அ.தி.மு.க.சார்பில் கட்சி 51 வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் திசையன்விளை நேரு திடலில் நேற்று இரவு நடந்தது.

நெல்லை மாவட் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மாவட்ட மகளிரணி செயலாளரும் திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திசையன்விளை நகர செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார் கொள்கைபரப்பு துணை செயலாளர் விந்த்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆரம்பித்து 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிய கட்சி, சாமானிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி.சூப்பர் ஆட்சி நடத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. சுமாரான ஆட்சி கூட நடத்தவில்லை. மின்கட்டணம், சொத்து வரியை உயர்த்திவிட்டு இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசு தான் என கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்பது பொய்யானது. ஜெயலலிதா ஆட்சியையும், கட்சியையும் சிங்கம் போல் நடத்தினார்.

இவ்வாறு விந்தியா கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் பால்துரை, முன்னாள் எம்.பி.சவுந்தர்ராஜன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் முத்துகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டமுடிவில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News