உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-09-23 09:01 GMT   |   Update On 2023-09-23 09:01 GMT
  • நவீன அரிசி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை சித்தர்க்கா ட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை நிர்வாகம் ஐகோர்ட்டில் அளித்த உறுதி மொழியை மீறி சுற்றுச்சூழல் சீர்கேட்டில் ஈடுபடுவதாக கூறி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல்,

, ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி மதியழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமணி தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமார் வரவேற்றார். இந்த ஆலையால் ஆயிரக்க ணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வழக்கறிஞர்கள் கணபதீஸ்வரன், பாலாஜி, விஜயசுந்தரம், ஆறுமுகம், வசந்த் ஆகியோர் விளக்க உரையாற்றினார்.

இதில் நவீன அரிசி ஆலை நிர்வாகம் ஐகோ ர்ட்டில் அளித்த உறுதிமொ ழிக்கு எதிராக, புழுங்கல் அரிசியை அரைக்க நாள் ஒன்றுக்கு 5 டன் உமியை எரித்து வருவதால் காற்றில் கரித்துகள்கள் பரவி மனிதர்களுக்குசுவாசக் கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய் ஏற்ப டுகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஏழு மணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News