உள்ளூர் செய்திகள்

ஆவுடையானூர் பகுதிகளில் கிராமங்களை புறக்கணிக்கும் அரசு பஸ்-முறையாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-08-04 08:47 GMT   |   Update On 2022-08-04 08:47 GMT
  • தென்காசியில் இருந்து கடையம் வரை தடம் எண். 16 டவுன் பஸ் சென்று வருகிறது.
  • இந்த பஸ் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடமான ஆவுடை யானூர், சின்னநாடாரூர், கோட்டைவிளையூர், கரி சலூர் வழியாக செல்லாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார்.

தென்காசி:

தென்காசியில் இருந்து கடையம் வரை செல்லும் தடம் எண். 16 டவுன் பஸ். இந்த பஸ் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடமான ஆவுடை யானூர், சின்னநாடாரூர், கோட்டைவிளையூர், கரி சலூர் வழியாக செல்லாமல் ஆவுடையானூரில் இருந்து நேரடியாக மயிலப்பபுரம் வழியாக கடையத்தை நோக்கி சென்று விடுகிறது.

இதனால் புறக்கணிக் கப்பட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் ஆட்டோக்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு அதிக பணம் கொடுத்து பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த அரசு பஸ்சை அனுமதிக்கப் பட்ட வழித்த டத்தில் முறையாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Tags:    

Similar News