உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் போதைபொருள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-10-16 09:32 GMT   |   Update On 2022-10-16 09:32 GMT
  • போதை பொருட்கள் பயன்படுத்துவோர், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
  • எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குரியாவதை எவ்வாறு தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து. மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் காவல் உதவி ஆய்வாளர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நேற்று கீழ் கோத்தகிரி மற்றும் சோலூர்மட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு எது போன்ற தீங்கு ஏற்படுகிறது.

போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும், எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குரியாவதை எவ்வாறு தடுப்பது குறித்த விழிப்புணர்வை காவல் உதவி ஆய்வாளர் யாதவகிருஷ்ணன் வழங்கினார். 

Tags:    

Similar News