உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

Published On 2022-10-26 09:59 GMT   |   Update On 2022-10-26 09:59 GMT
  • விழாவில் 20 மாற்றுதிறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
  • விழாவிற்கு பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் தலைமை வகித்தார்.

பாபநாசம்:

பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் தலைமை வகித்து வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா ஆகியோர் கலந்துகொண்டு 20 மாற்றுதிறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்கள். விழாவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களும் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை இயன்முறை மருத்துவர் ராஜராஜன், சிறப்பாசிரியர்கள் அனிதா, மேரி, தேன்மொழி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் சுதாகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News