உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள்களை டி.கே.ஜி.நீலமேகம் வழங்கினார்.

மாற்றுதிறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கல்

Published On 2023-07-14 15:45 IST   |   Update On 2023-07-14 15:45:00 IST
  • 2 கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.
  • ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர மோட்டார் வாகனங்களை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தமிழ்நாட்டில் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஒரு கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்வழங்க வேண்டும் டி .கே .ஜி. நீலமேகம் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக ஒரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனம் வேண்டும் என உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து இன்று தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, சரவணன் ஆகிய இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி, தி.மு.க. பகுதி செயலாளர் சதாசிவம், மண்டல குழு தலைவர் கலையரசன், பகுதி துணை செயலாளர் வினோத், வட்டக் கழக நிர்வாகிகள் செழியன், கிள்ளிவளவன் , ராஜேஷ், மகாலிங்கம், அரசு, சிவக்குமார், பாலாஜி, வினோத், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News