உள்ளூர் செய்திகள்

புரோட்டா சாப்பிட்ட ஐ.டி. ஊழியர் சுருண்டு விழுந்து சாவு

Published On 2022-10-18 10:35 GMT   |   Update On 2022-10-18 10:35 GMT
  • திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
  • கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கோவை,

கோவை தெலுங்கு வீதியை சேர்ந்தவர் சுருளி ஆண்டவர். இவரது மகன் சூர்யா பாண்டியன் (வயது 25). ஐ.டி. ஊழியர்.

சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் கடைக்கு சென்று புரோட்டா வாங்கினார். பின்னர் வீட்டிற்கு சென்று அதனை சாப்பிட்டார். சாப்பிட்டு முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சூர்யா பாண்டியனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை 

Tags:    

Similar News